Sunday 11 March 2012

02. தொழில் விருத்தியடைய மற்றும் பொருள் சேர, சொல்ல வேண்டிய மந்திரங்கள் !


திருச்சிற்றம்பலம்!

வாசி தீரவே, காசு நல்குவீர் !
மாசில் மிழலையீர் ! ஏசல் இல்லையே. 
இறைவர் ஆயினீர் ! மறைகொள் மிழலையீர் !
கறை கொள் காசினை முறைமை நல்குமே !
செய்யமேனியீர் ! மெய் கொள் மிழலையீர் !
பை கொள் அரவினீர் ! உய்ய, நல்குமே !
நீறு பூசினீர் ! ஏறது ஏறினீர் !
கூறு மிழலையீர் ! பேறும் அருளுமே !
காமன் வேவ, ஓர் தூம கண்ணினீர் !
நாம மிழலையீர் ! சேமம் நல்குமே !
பிணி கொள் சடையினீர் ! மணி கொள் மிடற்றினீர் !
அணி கொள் மிழலையீர் ! பணிகொண்டு அருளுமே
மங்கை பங்கினீர் ! துங்க மிழலையீர் !
கங்கை முடியினீர் ! சங்கை தவிர்மினே !
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர் !
பரக்கும் மிழலையீர் ! கரக்கை தவிர்மினே !
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர் !
இயலும் மிழலையீர் ! பயனும் அருளுமே !
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார் ;
வெறி கொள் மிழலையீர் ! பிரிவது அரியதே,
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் – தாழும் மொழிகளே

திருத்தலங்கள் தோறும் யாத்திரையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர், திருவீழிமிழலையில் தங்கி இருந்து பெருமானை வணங்கிப் பல பதிகங்கள் பல அருளிச் செய்யலானார். அவரோடு திருநாவுக்கரசரும் உடன் இருந்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார். அக்காலத்தில் வான் மழை பொய்த்து, நிலம் வறண்டு, விளைச்சலும் குறைவுற்று வறுமையுண்டாயிற்று. மக்கள் பசித் துன்பத்தால் வருந்தினார்கள்.
சம்பந்தர் கனவில் ஈசன் தோன்றி, நிலவுலகத்தின் இயல்பால் வறுமை வந்தடைந்தாலும், தீமை பயக்கும் பசி நோய் சம்பந்தர் மற்றும் நாவுக்கரசரை வந்து அடையாது என்றும் ஆயினும் அவர்களைச் சார்ந்தோர் பசி நோயால் வருந்தாதவாறு பலிபீடத்தின் மீது தினமும் பொற்காசு ஒன்றினை அளிப்பதாகவும், அதன் வாயிலாக இத்துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என அருளினார்.
அப்பொற்காசைக் கொண்டு தடையின்றி திருவமுது தினமும் நடைபெற்றது. ஆனால் பொற்காசு மாற்றுக்குறைந்த தன்மையில் இருந்ததால் திருவமுது படைப்பது தினமும் தாமதமானது.
மாசு நீங்கிய பொற்காசு அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டதே இப்பதிகம்.
   
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

No comments:

Post a Comment