Wednesday 20 August 2014

14. நெடுநாள் பிள்ளை வரம் இல்லாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்!

சேய்த்தொண்டர் புராணத்தில், நாகனார், எட்டாத தம் மகவு நோக்கை எட்டவேண்டுமென முருகனிடம் குறையிரந்ததாக எட்டுப்பாடல்களை அமைத்துள்ளார் தேனூர் வரகவி வே.ச.சொக்கலிங்கம் பிள்ளை, இவற்றை நிதம் பாராயணம் செய்தால் பிள்ளை வரம் வேண்டுவோர் அனைவருக்கும் சட்டிப்பெருமான் இட்டத்தை நிறைவேற்றுவான் என்பது திண்ணம்! திண்ணம்!! – செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார்.



பிள்ளைமுகம் பாராப் பெருமலடர் என்றுலகோர்
எள்ளிநகை யாட எளியோமை விட்டனையோ
வெள்ளி மலை அத்தன் விழிகுளிறு மாறுதினம்
துள்ளி விளை யாடுசுயஞ் சோதிச் சுடர்க் கொழுந்தே.

மைந்தர்முகம் பாரா மலடரென்று மாநிலத்தோர்
நிந்தைசெய வாடும் நிலையிலெமை விட்டனையோ
இந்து நுதல் அம்மை இருகண் குளிரும்விதம்
சுந்தரக்கூத் தாடுசுயஞ் சோதிச் சுடர்க் கொழுந்தே.

தமரும் பிறருந் தனயனிலார் என்றிகழ
விமல எளியோங்கள் வெட்கினோம் வெட்கமற
அமரர் பெருமானுக் காருந் திருஅளித்த
குமரையா நீஉன் குளிர்கண்ணாற் பாராயோ.

சந்ததிகள் இல்லாச் சழக்கர் இவர்களென்றே
இந்த உலகோர் எமைஇகழ்ந்து கூறஉளம்
வெந்தையா எந்தையுனை வேண்டினோம் வேட்கையறக்
கந்தையா நீஉன் கடைக்கண்ணாற் பாராயோ.

மண்ணாள் அரசிருந்தும் மைந்தனிலை என்று மனப்
புண்ணாளராகிப் புலம்புகின்றோம் புன்மைஅறப்
பெண்ணாண் அலியலாப் பிஞ்ஞகனார் கொஞ்ச வரும்
கண்ணாளா நீஉன் கடைக்கண்ணாற் பாராயோ.

மண்களிக்கு மாறோர் மகவருளி வாழ்த்தெளியோம்
கண்களிக்கு மாறுனது காட்சிதரல் ஆகாதோ
விண்களிக்கும் வெள்ளை விடைப்பாகர் தம்இடத்துப்
பெண்களிக்கக் கொஞ்சிவரும் பிள்ளைப் பெருமானே.

முத்தமிட்டுக் கொஞ்சி முலைப்பால் இனிதூட்டிக்
கைத்தலத்தில் ஏந்திஇரு கண்குளிரப் பார்த்தெமது
சித்தங் குளிரஒரு சேய்அருளாய் ஞாலம்அருள்
வித்தகியாள் கொஞ்சி விளையாடும் பாலகனே.

இன்றுவரும் நாளைவரும் என்றெமது காலமெலாம்
சென்றதலாற் சேயின் திருமுகத்தைக் கண்டறியோம்
குன்றுதொறும் ஆடுங் குமரையா எங்குறையை
என்று தவிர்ப்பாயோ...

No comments:

Post a Comment